காரைக்கால், அக்.21: கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, காரைக்கால் சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் கோபு தலைமை வகித்தார். போராட்டத்தில் ஏராளமான ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கொரோனா காலத்தில் சுற்றுலா வாகனங்கள் இயங்காமல் இருப்பதால் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.