சின்னமனூர், அக். 16: சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் புலிவாகனன். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவனாண்டி, விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று புலிவாகனன் மனைவி சுகன்யா (30) தெருவில் நடந்து சென்றபோது, சிவனாண்டி (48), அவரது மனைவி தங்கம் (45), தங்கேஸ்வரன் மகன் பிரசன்னா, சிவனாண்டி மகன் அபிஷேக் ஆகியோர் வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.