தூத்துக்குடி, அக். 2: தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் 2ம்தேதி தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள பெரியநாயகிபுரத்தில் முருகேசன் (34) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் அஜித் என்ற பப்பாளி (20), புதுக்கோட்டை வடக்கு காலாங்கரையைச் சேர்ந்த ராஜமந்திரி மகன் முனிஸ் என்ற முனிஸ்வரன் (21) உள்ளிட்டோரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இதே போல் கடந்த 13ம் தேதி கீழ கூட்டுடன்காடு ராஜிவ்நகர் பகுதியில் வேலுச்சாமி என்பவரது மகன் சின்னராஜ் (23) தாக்கப்பட்டது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் பாலா என்ற பாலமுருகன் (20) என்பவரை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.