காரைக்குடி, செப்.30: கொரோனா நோய் தொற்று காலத்தில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் கல்வி நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வணிகவியல் துறையின் சார்பில் தலைமைப்பண்பு மற்றும் மேன்மை என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். விழாவை துவக்கி வைத்து துணைவேந்தர் ராஜேந்திரன் பேசுகையில், ‘‘உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி வசதிகளை மேம்படுத்துவது அரசின் கடமையாக உள்ளது. அறிவும், திறமையும் கல்வியின் இரண்டு முக்கிய அம்சம். அறிவையும், திறமையையும் ஒருங்கே பெறுவது தான் பட்டம் பெறுவோரின் நோக்கமாக இருக்க வேண்டும்.