செல்போன் திருடியவர் கைது

காரைக்குடி, செப்.25: காரைக்குடியில் வீடுபுகுந்து செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி சூடாமணிபுரம் ரோஜா வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது வீட்டில் இருந்து செல்போனை திருடி கொண்டு சங்கர்(53) என்பவர் ெவளியே வந்தார். அவரை பிடித்து சுரேஷ்குமார் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: