உத்தமபாளையம், மார்ச் 20: உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில், குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில் பல ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற 3 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. தினசரி டன் கணக்கில் குப்பைகள் சேகரமாகின்றன.