திருப்பத்தூர், மார்ச் 20: திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சலி (52). இவர் ஆத்தங்கரைப்பட்டி ஊருக்குள் செல்லும் வழியில் வசித்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 15 ஆடுகளை வைத்து மேய்த்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சில வீடு திரும்பவில்லை. இதனால் இரவு சுமார் 8 மணியளவில் ஆடுகளை தேடி அருகில் சென்று பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.