சென்னை: பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் பாய்ந்து வருகிறது. இங்கிருந்து, சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்க்க வினாடிக்கு 430 கன அடி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. தற்போது லிங்க் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோர கிராம இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருவள்ளூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் வெள்ளவேடு சண்முகம் மகன் சரவணன்(15), திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை கார்த்திக்ராஜா மகன் குபேந்திரராஜ்(15) உட்பட அவரது நண்பர்கள் 9 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக ஹால் டிக்கெட் வாங்க பள்ளிக்கு வந்தனர். ஹால் டிக்கெட் வாங்கிய அவர்கள், பூண்டி ஏரிக்கு சென்றனர். அங்கு ஏரியை ரசித்துவிட்டு, லிங்க் கால்வாய் வந்தனர். அங்கு, அனைவரும் குளிப்பதென முடிவு செய்து, தங்களது ஆடைகளை கழற்றி கரை மீது வைத்துவிட்டு குளிக்க கால்வாயில் குதித்தனர்.