ஆலந்தூர்: ஆதம்பாக்கம் திமுக சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. திமுக தலைவர் முக.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலந்தூர் 165வது வட்ட திமுக சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கிருமி நாசினிகள், முககவசம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி ஆதம்பாக்கம் நியூ காலனியில் நடந்தது.
இதில், வட்ட செயலாளர் கே.ஆர். ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.