சென்னை: வாகன சோதனை என தனியார் நிறுவன ஊழியரிடம் பைக்கை பறித்து சென்ற 3 போலி காவலர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாலிகிராமம் குலசேகரபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (19). தனியார் நிறுவன ஊழியர். ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது பைக்கில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது ஆற்காடு சாலையில் 3 பேர் வழிமறித்து “நாங்கள் காவலர்கள்” என்று கூறி பைக்கிற்கான ஆவணங்களை கேட்டனர். ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக அவர் கூறியதும், 3 பேரும் பைக்கிற்கான ஆவணங்களை கொண்டு வந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் காட்டி விட்டு பைக்கை எடுத்து செல்லும்படி கூறி பைக்கை எடுத்து சென்றனர்.