கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதலால் பலரும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் அவசர நிலையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வைரஸ் தாக்குதலில் இருந்து காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மற்றும் தனியார் சுகாதார அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள், சுகாதார நடவடிக்கைகள் மூலம் அந்த பிரசாரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுக்கும். இந்த விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Related Stories: