சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதலால் பலரும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் அவசர நிலையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.