மதுரை, மார்ச் 19: மதுரையில் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: டெல்லியைச் சேர்ந்த அமன்தீப் சிங், ஹர்மன்தீப்சிங், மந்ஜீட்காரூர், ஜஸ்பீர்கவுர், நேனாபாவார் ஆகியோர் மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் பொதுமக்கள் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி பலர் பணம் முதலீடு செய்தனர்.ஆனால், அவர்களுக்கு மீண்டும் பணம் கிடைக்கவில்லை. எனவே, பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர்.