விளாத்திகுளம் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

விளாத்திகுளம், மார்ச் 18:  தூத்துக்குடி மாவட்ட  பார்வையிழப்பு தடுப்பு சங்கம், விளாத்திகுளம் சத்ய சாயி  சேவா சமிதி, வான்மழை  உழவர் உற்பத்தி நிறுவனம், வேம்பு மக்கள் சக்தி இயக்கம், அரவிந்த் கண்  மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.  சத்திய சாயி சேவா சமிதி நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்வேல் தலைமை  வகித்தார். வேம்பும் மக்கள் சக்தி இயக்கத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை  ஆரோக்கியம்,விளாத்திகுளம் ஸ்காட் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ்   முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சின்னப்பன் எம்.எல்.ஏ., முகாமை  துவக்கிவைத்துப் பார்வையிட்டார். முகாமில் நீரிழிவுநோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் நோய், கண் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பார்வைக்கோளாறு தொடர்பாக பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அரவிந்த் கண் மருத்துவமனை  மருத்துவர் அக்ருதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாம் பணிகளில் சத்ய சாய் சேவா  சமிதி விளாத்திகுளம் பொறுப்பாளர் தர்மர், கன்வீனர் மாரியப்பன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: