தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் உள்ள சேதமடைந்த சமுதாய நலக்கூடத்தில் ரேஷன் கடை அமையவுள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 52வது வார்டுக்குட்பட்ட ராயபுரம் தொப்பை தெருவில் மாநகராட்சி சமுக நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் பழுதடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. இதனால் இந்த இடத்தில் உணவு பொருள் வழங்கல் அலுவலகம் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தது. இதனையறிந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.