சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளைபோன 216 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தர்மராஜன் தலைமையில் நடந்தது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி, திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து, செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது.