அரியலூர், மார்ச் 13: அரியலூர் அடுத்த மணக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் ரத்னா, எஸ்பி சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் முதிய மரங்களுக்கு பஞ்சகல்யாணி அளித்து மேலும் உயிர்ப்பிப்பது பற்றி சோலைவனம் அமைப்பினர் செயல்விளக்கம் அளித்தனர். இதைதொடர்ந்து எஸ்பி சீனிவாசன் பேசுகையில், மாணவர்களின் வளர்ச்சி ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. அவர்களை சிறந்த வழியில் வழிநடத்தி செல்வது ஒரு ஆசிரியரின் கடமை. சாலை விதிகள் பற்றிய அறிவுரைகள் தினசரி இறைவணக்க கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டும்.