சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வந்த பார்சலில் அச்சக மைக்குள் சிறு, சிறு தங்க குண்டுகள் இருப்பது தெரிந்தது. சுங்க அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சார்ஜாவில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கூரியர் பார்சல்கள் வந்தன. அதனை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பார்சலில் அச்சக தொழிலுக்கு பயன்படும் மெட்டல் மை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதனை திறந்து பார்த்தபோது, அதனுள் மெட்டல் மையுடன் சிறு, சிறு தங்க உருண்டைகள் அதிகளவில் இருந்தன.