ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (22), சாமுவேல் (22). ரவுடிகளான 2 பேரும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள். இந்த 2 பேரும் கடந்த டிசம்பர் மாதம் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் முன்பு ஆஜராகி, அடுத்த ஒரு வருடத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம், என நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் கையெத்திட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், இதை மீறி, 2 இருவரும் ஆதம்பாக்கத்தில் திருட்டில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.