சென்னை: அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த உத்தரவை பலர் பின்பற்றுவதில்லை. இதனால் சென்னை, தலைமை செயலகத்தில் அடையாள அட்டை அணியாத ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் நிலை உள்ளது.தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா கடந்த மாதம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துணை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி இருந்த அறிக்கையில் ஊழியர்கள் ஐடி கார்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த உத்தரவை ஏற்று, சென்னை தலைமை செயலகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து பணிக்கு வருகிறார்கள்.