ஆவடி: அம்பத்தூர், சம்தாரியா நகரைச் சேர்ந்தவர் வசந்தராஜ் (24). இவர், அரசு சட்டக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தராஜ் பைக்கில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பங்க்கிற்கு பெட்ரோல் போட சென்று உள்ளார். அப்போது, அங்கு வரிசையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து, இவர் தனது பைக்குக்கிற்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளார். அப்போது, அங்கிருந்த ஊழியர் ஒருவர் வரிசையில் வரும்படி கூறியுள்ளார் இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.