காடையாம்பட்டி, மார்ச் 3: காடையாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜமுனா(29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை, ஜமுனா தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் பகுதியில் இருந்து ஹெல்மெட் அணிந்தவாறு பைக்கில் வந்த 2 பேர், வழிகேட்பதுபோல் ஜமுனா அருகில் நெருங்கியுள்ளனர். திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால், திடுக்கிட்ட ஜமுனா கூச்சலிட்டார்.