பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம், மல்லிகா நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி சார்பில் போதிய குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் வேறு வழியின்றி குப்பை கழிவுகளை சாலையோரம் வீசும் நிலை உள்ளது. இதனால், அங்குள்ள தெருக்கள் குப்பை குவியலாக காட்சியளிப்பதுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், இந்த குப்பை கழிவுகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் கிளறுவதால், குப்பை சிதறி தெருக்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த பன்றிகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், இப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் பொது சுகாதாரத்தை பேணி காப்பதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இந்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்காததால், சாலையோரம் மக்கள் குப்பையை கொட்டும் நிலை உள்ளது.