சேலம், மார்ச் 2:சேலத்தில் குடிபோதையில் எஸ்ஐயை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்கிறது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள குள்ளமுடையானூரை சேர்ந்தவர் பாலாஜி (32), போலீஸ்காரர். ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு ஜீப் டிரைவராக இருந்த அவர், குடிபோதையில் இருந்ததால், மாவட்ட ஆயுதப்படைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாற்றப்பட்டார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் அளவுக்கு அதிகமான குடிபோதையில் மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்போது, வாகன சோதனையில் இருந்த மேச்சேரி எஸ்ஐ அருண்குமார் தலைமையிலான போலீசார், போலீஸ்காரர் பாலாஜியை மறித்து சோதனையிட்டனர். அப்போது, எஸ்ஐ அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார்.