தண்டையார்பேட்டை: காசிமேடு ரவுடி கொலை வழக்கில், 6 பேர் போலீசில் சரணடைந்தனர்.காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் திவாகர் (28), பிரபல ரவுடி. இவர் மீது மூன்று கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த சில மாதங்களாக விசைப் படகுகளுக்கு கேன் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, காசிமேடு கடற்கரையில் விசைப் படகுகளுக்கு கேன் தண்ணீர் சப்ளை செய்துவிட்டு, காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் நல சங்க அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த, 8 பேர், திவாகரை மறித்து அரிவாளால் ஓட ஓட வெட்டி விட்டு தப்பி சென்றனர்.