கிருஷ்ணகிரி, பிப்.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10வது மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அரசு பள்ளி விடுதிகளில் தங்கி 10வது மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சங்கர், தமிழ் பட்டதாரி ஆசிரியர் மரியஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதிக் காப்பாளர் சவரிதாஸ் வரவேற்புரையாற்றினார்.