×

மேலசங்கரன்குழியில் 10 நாட்களாக நிற்கும் மர்ம கார்

ஈத்தாமொழி, பிப்.27: ராஜாக்கமங்கலம்  போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட மேலசங்கரன்குழி பகுதியில் சாலையோரம் கடந்த 10  நாட்களாக ஒரு சொகுசு கார் நிற்கிறது. அது யாருடையது, இங்கு யார்  கொண்டு வந்து நிறுத்தினார்கள் என தெரியவில்லை. தொடர்ந்து கார் அங்கேயே  நிற்பதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்து சுற்றுவட்டார  பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். ஆனால் யாரும் அதற்கு உரிமை  கோரவில்லை. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல்  தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். சென்னை  பதிவெண் ெகாண்ட அந்த காரை யாராவது திருடி இங்கு கொண்டு வந்து நிறுத்தி சென்றார்களா? அல்லது குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி விட்டு இங்கு மறைவாக  நிறுத்தி சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...