சென்னை: ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதற்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு சட்டமன்ற கூட்ட தொடரில் 15 கோடி ஒதுக்க முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். அதேபோல், உலமாக்களின் ஓய்வூதியம் 1,500லிருந்து இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோருக்கான எண்ணிக்கையை அதிகரித்து தருமாறு பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் செல்ல 6028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் 3736 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி கிடைத்துள்ளது என்று முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.