விழுப்புரம், பிப். 26: விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்ரோட்டில் விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியிலிருந்து 300 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜி மனைவி மேரி (50), அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி எலிசபெத் (52), வேலந்தால் கிராமத்தை சேர்ந்த மாதவன் மனைவி பூங்கொடி (40) ஆகிய மூவரும் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் 3பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.