×

சமூக சேவகரின் வீட்டை உடைத்து துணிகர கொள்ளை

புதுச்சேரி, பிப். 26: புதுவை நகர பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெறும் சமூக சேவகரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பொருட்களை துணிகரமாக கொள்ளையடித்து சென்றனர். புதுவை சின்னவாய்க்கால் வீதியை சேர்ந்தவர் சாமி ஆரோக்கியசாமி (56). சமூக சேவகரான இவர், தனது வீட்டை புனரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் அந்த வீட்டை காலி செய்து நகர பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்துள்ளார். தினமும் தனது வீட்டில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை அவர் பார்த்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி 23ம் தேதி இரவு அந்த வீட்டை பூட்டிவிட்டு சென்ற சாமி ஆரோக்கியசாமி மறுநாள் அங்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஏசி, வெல்டிங் மிஷன், டிரில்லிங் மிஷன், கட்டிங் மிஷன் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் இரவு வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த மிஷன்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சாமி ஆரோக்கியசாமி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த எஸ்ஐ பிரபு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Venture robbery ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்