×

மெக்கானிக் மாயம்

கடையம், பிப். 25:  மடத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஜேசு மிக்கேல் மகன் அந்தோணி பாஸ்கர்(38). இவர் அங்கு பைக் ஒர்க்க்ஷாப் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் குடும்பதராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டு கடையம் அருகே உள்ள தோரணமலைக்கு வந்து மலையடிவாரத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர் மலையின் மேல் பகுதிக்கு சென்றது அங்கு பொருத்தபட்ட கண்காணிப்பு காமிராவில் தெரிந்தது. தொடர்ந்து அவர் வீடு திரும்பாதது குறித்து அவரது மனைவி செல்வ மேரி கடையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார், வனத்துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் அந்தோணி பாஸ்கரை நேற்று தேடினர். அப்போது மலைக்கு மேல் பகுதியில் அந்தோணி பாஸ்கர் அணிந்திருந்திருந்த உடைகள் மற்றும் பொருட்கள் கிடந்தன.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது