×

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

தேனி, பிப். 21: ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (65). இவரது மனைவி பத்மா (58). சில மாதங்களுக்கு முன் வேலுச்சாமி வீட்டில் கீழே விழுந்ததில், அவருக்கு இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி மனைவிக்கு தெரியாமல் வேலுச்சாமி வீட்டில் இருந்து புறப்பட்டு, தேனி சென்று அங்கிருந்து ஒரு அரசு பஸ்சில் ஏறி கம்பம் நோக்கி சென்றார். அப்போது தேனியை அடுத்த வீரபாண்டி அருகே உள்ள பாலகுருநாதபுரம் அருகே, பஸ்சில் இருந்து வேலுச்சாமி தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மனைவி பத்மா அளித்த புகாரின்பேரில், வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு