சென்னை: செய்யூர் அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியா (28). அதே கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன், சத்தியாவிடம் ₹50 ஆயிரம் மற்றும் நகைகள் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பி கொடுக்க வில்லை. இதுகுறித்து சத்தியா, மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு, உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.