×

சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலைக்கு நிரந்தர கட்டிடம்

சுரண்டை, பிப்.19: சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலைக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாக குழு கூட்டம் கூட்டுறவு பண்டக சாலை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் எஸ்கேடி. ஜெயபால் தலைமை வகித்தார். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சரவணகுமார் வரவேற்று அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் 0-2099 கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில்  நிரந்தர கட்டிடம் கட்ட அனுமதி கோரி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 புதிய ரேசன் கடைகள் துவங்க கோருதல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இயக்குனர்கள் அண்ணாமலை, ஆறுமுகம், சங்கர், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து, வசந்தி, தேனம்மாள் தங்கராஜ், ராதிகா பங்கேற்றனர்.

Tags : Co-operative Warehouse ,
× RELATED கவுரவமான பணி ஓய்வா?: கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கடிதம்