பட்டா கத்தியால் கேக் வெட்டிய 4 பேர் கைது

ஆலந்தூர்: கிண்டி ஈக்காட்டுதாங்கல் கணபதி காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது 1 அடி நீளபட்டா கத்தியால் வெட்டினார். அவர்கள் சத்தம்போட்டு பாட்டு  பாடி கொண்டாடியதால் எரிச்சலடைந்த அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாருக்கு புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சந்துரு போலீசாருடன் வருவதை கண்டவர்கள் நாலாப்புறமும் ஓடினர். இதில் பிறந்த நாள் விழா கொண்டாடிய ஆகாஷ் (20),  சைதாப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் (23), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த மதன் (21), ஆலந்தூரை சேர்ந்த சதீஷ் (19) ஆகிய 4 பேரும் போலீசிடம் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து  காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: