வேளச்சேரி: அடையாறு ஆற்றில் திரு.வி.க பாலத்தின் கீழ் பகுதியில், ஒரு பெண் சடலம் மிதப்பதாக நேற்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அடையாறு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், கோட்டூர்புரத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ரமேஷ் என்பவரின் மனைவி விமலா (43) என தெரியவந்தது.