அடையாறு ஆற்றில் பெண் சடலம் மீட்பு

வேளச்சேரி: அடையாறு ஆற்றில் திரு.வி.க பாலத்தின் கீழ் பகுதியில், ஒரு பெண் சடலம் மிதப்பதாக நேற்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அடையாறு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், கோட்டூர்புரத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ரமேஷ் என்பவரின் மனைவி விமலா (43) என தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சடலம் கிடந்த இடத்தில்  அனாதையாக கிடந்த மோட்டார் சைக்கிள்  ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்னைர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விமலா எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.

Related Stories: