வேளச்சேரி: பள்ளிக்கரணையில் தெரு நாயை அடித்துக் கொன்ற விவகாரத்தில் 2 போலீசார் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளிக்கரணை காமகோடி நகர் 7வது தெருவில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்கு வெறி பிடித்து, பொதுமக்களை கடிப்பதாக கடந்த 24ம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பள்ளிக்கரணை போலீசார் இருவர், கிருபா என்ற நாய் பிடிப்பவர் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த நாயை பிடித்து கோணிப்பையில் போட்டு மூட்டை கட்டினர். பின்னர், அதனை தூக்கிச் சென்று சரமாரியாக தாக்கினர். இதைப் பார்த்து பாவப்பட்ட அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் நாயை மீட்டு, புளுகிராசில் ஒப்படைத்தார்.