கிருஷ்ணகிரி, ஜன.23: ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம், ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, 25 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சியுடன், ஓஎச்எல் எக்யூப்மெண்ட் 33 கேவி., டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூசன், டவர் மெயின்டனன்ஸ் மற்றும் எச்டி ஓவர் ஹெட் பழுது பார்த்தல் ஆகிய பிரிவுகளில் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதம் ₹33 ஆயிரம் முதல் பணி அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்குவதுடன், விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள், வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.