ஓசூர், ஜன.23: ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ஈரநிலம் அறக்கட்டளையும் இணைந்து அன்னை பூமி என்ற தலைப்பில் கல்லூரியில் ஓவியக்கண்காட்சி நடத்தியது.கண்காட்சியை கல்லூரி முதல்வர் முத்துமணி திறந்து வைத்தார். அவர் மாணவர்களிடம் சமூக சிந்தனை உடைய சித்திரங்களை வரைந்து தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு தனித்தன்மையும் வெளிப்படும் என்றார். ஓவியக்கண்காட்சியில், கணினி அறிவியல் துறைத்தலைவர் சாந்தி ஜெஸ்லெட், வணிகவியல் துறைத்தலைவர் மதிவாணன், கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் சிவராமன், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் யுவராஜ், உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பாலாஜி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.