×

மான் கறி சமைத்த முதியவருக்கு ₹50 ஆயிரம் அபராதம்

வருசநாடு, ஜன.22: கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட பாலூத்து மேற்குபீட் மலை அடிவாரத்தில் சேர்மலையாண்டி கோவில் பகுதியில் மான் கறி சமைத்துக் கொண்டிருந்த மொக்கைச்சாமி மகன் சேர்மலை(70) என்பவரை கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்டமனூர் வனச்சரக அலுவலர் மற்றும் வனவர் செல்வராஜ், வனக்காப்பாளர் காமேஷ், வனக்காவலர் குருசாமி, மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர். மேலும் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்பு சேர்மலைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கப்பட்டது

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு