×

நாமத்வாரில் ஏகாதசி பூஜை

பெரியகுளம், ஜன.22: தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. குளோபல் ஆர்கனைசேசன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில் மகாரண்யம் முரளீதரஸ்வாமிகளின் அருளாசியுடன் ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு அனைத்து அபிஷேகங்கள் நடைபெற்று திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உலக நன்மை வேண்டியும் அனைவருக்கும் அனைத்து நன்மைகள் வேண்டியும் மகா மந்திர கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Ekadasi Pooja ,Namadwar ,
× RELATED மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை