×

உத்தமபாளையம் இந்திரா நகரில் வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசம்

உத்தமபாளையம், ஜன.22: உத்தமபாளையம் இந்திராநகரில் 4 வைக்கோல் படப்புகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. உத்தமபாளையம் யாதவர் தெருவை சேர்ந்தவர் பழனி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்புகள் இங்குள்ள இந்திராநகர் ஆர்.டி.ஓ.ஆபிஸ் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் உள்ளது. நேற்று காலை இந்த வைக்கோல் படப்புகளில் திடீரென தீப்பற்றியது. இதில் 4 வைக்கோல் படப்புகளும் எரிந்து நாசமாயின. வைக்கோல் படப்புகளில் யாரேனும் ்தீ வைத்தனரா, அல்லது தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்று உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Straw ,Indira Nagar ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...