×

நர்சிங் மாணவி மாயம்

விருத்தாசலம், ஜன. 22: கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர்  மணிமந்திரி மகள் வீரசக்தி (17). இவர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள  தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்  நேற்று முன்தினம் தனக்கு தேவையான நோட்டு, பேனா வாங்கி  வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கருவேப்பிலங்குறிச்சி சென்றவர் திரும்ப  வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு  உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து  வீரசக்தியின் தாய் ஜோதி கொடுத்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை