சென்னை: சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சலீம் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் இவர்களது காதல் தொடர்ந்தது. இந்த நிலையில், கடந்த 10.9.2017 அன்று, சலீம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை கடத்தி சென்று, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு, இருவருக்கும் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து சலீம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, மகள் மாயமானதாக பெற்றோர், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.