பம்பை கலைஞர்கள் சங்க மாநாடு

காவேரிப்பட்டணம், ஜன.13: காவேரிப்பட்டணம் கலைமகள் கிராமிய பம்பை இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில், மாவட்ட மாநாடு மற்றும் மூத்த கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமல்நாதன் வரவேற்றுப் பேசினார். மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சிவக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் அசோக்குமார், வேங்கை பிரபு ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கி பேசினர். விழா குழு உறுப்பினர்கள் சரவணன், தனசேகரன், ராஜாமணி, ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் பூங்காவனம் நன்றி கூறினார்.

Related Stories: