சென்னை: ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில், டாஸ்மாக் கடை எதிரில் நேற்று முன்தினம் 3 பேர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தலைமை காவலர் அங்கமுத்து சம்பவ இடத்துக்கு சென்று, ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் கலைந்து செல்லும்படி கூறினார். இதில், ஆத்திரமடைந்த அவர்கள், அங்கமுத்துவை சரமாரி தாக்கி, அவரது வலது கையை முறித்து கட்டை விரலை உடைத்துள்ளனர்.