தாம்பரம், ஜன. 10: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் ஒரு ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு, சட்டவிரோதமாக 9 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்துக்கு நேற்று முன்தினம் காஞ்சிபுரம் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் சென்றனர். அங்கு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 9 சிறுவர்களை மீட்டு, தாம்பரத்தில் உள்ள அரசு சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.