காமெடி நடிகரின் கால்ஷீட் வாங்கி தருவதாக தயாரிப்பாளரிடம் 10 லட்சம் மோசடி

சென்னை: காமெடி நடிகர் யோகிபாபுவின் கால்ஷீட் வாங்கி தருவதாக தயாரிப்பாளரிடம் 10 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் போஸ் (40). தொழிலதிபரான இவர், அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருமன் சேர்ந்து சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். பின்னர் இந்த நிறுவனத்தின் சார்பில் ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’ என்ற தலைப்பில் சினிமா தயாரிக்க முடியு செய்தார்.

இதற்காக காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் நடிகை கேத்ரினவை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்தனர். அப்போது போஸ் நண்பரான அண்ணாதுரை என்பவர், காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் நடிகை கேத்ரினவின் கால்ஷீட் வாங்கி தருவதாக 10 லட்சம் முன் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் சொன்னப்படி நடிகர்களின் கால்ஷீட் வாங்கி தரவில்லை. எனவே கொடுத்த 10 லட்சம் பணத்தை போஸ் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தராமல் அண்ணாதுரை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சினிமா தயாரிப்பாளர் போஸ் சம்பவம் குறித்து வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: