அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47), பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் காலை சாந்தி காலனியில் நடைபயிற்சி சென்றபோது, காரில் வந்த 4 பேர் இவரை கடத்தி சென்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாநகர் போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தபோது, கடத்தல் கும்பல், திருமங்கலத்தில் இருப்பது தெரியவந்தது. அவர்களை மடக்கி பிடித்தபோது, காருக்குள் இருந்த 2 பேர் தப்பினர். 2 பேர் பிடிபட்டனர். காரில் இருந்து ரவிச்சந்திரனை போலீசார் மீட்டனர்.