அண்ணாநகர், ஜன.3: சென்னை ஐசிஎப், ரயில்வே காலனியில் வசிப்பவர் விஜி (48). ரயில்வே மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன் கேரளா சென்றார். அங்கிருந்து அனைவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர். அப்போது, இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.