மாவட்ட அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு

கிருஷ்ணகிரி, டிச.27:  கிருஷ்ணகிரியில் வருகிற 29ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி திருவாரூரில் மாநில அளவிலான கைப்பந்து (ஜூனியர்) 18 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும், மாவட்ட அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான போட்டி, வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: